முகப்பு

நன்றி இந்து தமிழ்த்திசை: மைய நூலகத்தில் ஒலிப் புத்தகம் வெளியீடு

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்
திருச்சி

திருச்சி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் மற்றும் பீனிக்ஸ் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிப் புத்தகம் வெளியீட்டு விழாவை இன்று (அக்.13) நடத்துகின்றன.

இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பிரிவு செயல் பட்டு வருகிறது. இங்கு பார்வை மாற்றுத் திறனாளிகளுக்காக கணினி மற்றும் பிற உபகரணங்களைப் பயன் படுத்தி ஒலிப் புத்தகங்களை பயன்படுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு உதவிடும் வகையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒலிப் புத்தகங்கள் இங்கு உள்ளன.

இந்நிலையில், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு செய்த தமிழின் சிறந்த நூறு நாவல்களின் ஒலிப் புத்தக வெளி யீட்டு விழா மாவட்ட மைய நூலக வளாகத்தில் நாளை (அக்.13) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பார்வை மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று பயன்பெறலாம்.

No comments:

Post a Comment